Showing posts with label கடவுள் நம்பிக்கை. Show all posts
Showing posts with label கடவுள் நம்பிக்கை. Show all posts

Wednesday, February 16, 2011

நாத்திகவாதம்: அஜாதசத்ருவுக்கு, அஜீத கேசம்பலி பதில்


ஓ! மன்னனே! பிச்சை அல்லது உயிர்பலி அல்லது காணிக்கை என்று எதுவுமில்லை. நற்பலனும் இல்லை, நல்ல அல்லது கெட்ட செயல்களுக்கு விளைவுகளுமில்லை. இந்த உலகம் அல்லது மறு உலகம் என்ற ஒன்றில்லை. தந்தையும் இல்லை தாயும் இல்லை. அவர்கள் இல்லாமல் வாழ்க்கையில் வசந்தம் வரும் என்பது இல்லை. மிக உயர்ந்த இடத்தை அடைந்த, முழுமையாக நடந்த,இந்த உலகத்தையும், மறு உலகத்தையும் தம்மளவில் புர்ந்துகொண்ட, அறிந்துகொண்ட, தங்கள் அறிவை மற்றவர்களுக்குக் கற்றுத் தருகின்ற துறவிகளோ அல்லது பார்ப்பனர்களோ இந்த உலகில் யாருமில்லை.

நான்கு மூலப்பொருள்களைக் கொண்டு உருவானதுதான் மனித உயிர். அவன் இறந்தால், அவனுடைய பூதவுடல் பூமிக்கு மீண்டும் சென்று விடும்; அவன் உடலின் திரவம் நீராகி விடும்; வெப்பம் தீயாகிவிடும்; மூச்சுக்காற்று காற்றில் கலந்து விடும்; அவன் வலிமை வானத்தில் கரைந்து விடும்; இந்த நான்கு பூதங்களும் அய்ந்தாவது பூதமாக்ய சவப்பெட்டியுடன் சேர்ந்து மனித உடலை அழித்து விடுகின்றன. சுடுகாட்டுக்குச் செல்லும் வரையிலும் மனிதர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள். ஆனால் அம்மனிதனுடைய எலும்புகள் வெளுத்து விடுகின்றன. அவனுடைய படையல்கள் சாம்பலாகி விடுகின்றன. தான தர்மங்கள் என்னும் கருத்து முட்டாள்களுடையது. தான தர்மங்களின் மூலம் நற்பேறு கிடைக்குமென்று அவர்கள் பேசுவது வடிகட்டிய பொய். சோம்பேறிகளின் வாயளப்பு. முட்டள்களாகியிருந்தாலும் சரி, அறிவாளிகளாகியிருந்தாலும் சரி, அவர்கள் இறந்த பிறகு அவர்களுடைய உடல் மறைந்த பிறகு எதுவுமே இருக்கப்போவதில்லை.

இதே போன்று சஞ்சயா பேலாத்திப்பட்டர் பின் வருமாறு கூறுகிறார்:

இன்னொரு உலகம் இருக்கிறதா என என்னிடம் கேட்பீர்களாயின், அப்படி ஒரு உலகம் இருப்பதாக நான் எண்ணியிருந்தால் ஆம் என்று கூறுவேன். ஆனால், நான் ஆம் என்று கூறப்போவதில்லை. அப்படி ஒரு உலகம் இருக்கிறதா அல்லது இல்லையா என்பது குறித்து நான் சிந்திப்பதுமில்லை. வேறுவிதமாகவும் நான் சிந்திப்பதுமில்லை. நான் அதை மறுக்கவுமில்லை. இன்னொரு உலகம் இருக்கிறது என்றோ அல்லது இல்லயென்றோ நான் கூறவுமில்லை. தற்செயலாகத்தான் மனித உயிர்கள் உருவாக்கப்படுகிறதா என்பது குறித்தோ, நன்மை, தீமை ஆகியவற்றின் விளைவுகள் குறித்தோ அல்லது உண்மையக் கண்டுபிடித்த மனிதன் மரணத்திற்குப் பின்பும் உயிர் வாழ முடியுமா என்பது குறித்தோ என்னிடம் கேட்பீர்களாயின் உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் இதே பதிலைத்தான் தருவேன்.

பக். 137-138, இந்தியா: காலத்தை எதிர்நோக்கி, யேன் மிர்தால், தமிழில் வெ. கோவிந்தசாமி, விடியல் பதிப்பகம், 2001.