Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Friday, August 5, 2022

பெண் உடல் என்பது வெறும் உடல் அல்ல!



 பெண் உடல் என்பது வெறும் உடல் அல்ல! ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க கருத்தியல்களின் உருவகம்!

மது போதையில் மூதாட்டியிடம் முத்தம் கேட்டு இளைஞர் தாக்கினார்!
63 வயது முதியவர் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இன்னொரு பக்கம் மாணவிக்கு ஆசிரியர்(கள்) பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி (கள்) தற்கொலை!
வல்லுறவுக்கு எதிராக புகார் கொடுத்து தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி பெயிலில் வெளியே வந்து பழி வாங்க அதே பெண்ணை கூட்டுப் பாலியல் வன்முறை செய்தார்!

என்று தினம் தினம் பாலியல் குற்றங்கள் பற்றிய செய்தி வந்து கொண்டிருக்கிறது. சிறுமிகள், பெண்களுக்கு எதிராக கொடூரமான கொலைகள், தற்கொலைகள், துன்புறுத்தல்கள் இல்லாத நாளே இல்லை. ஆனால் அரசுகள் என்ன செய்கின்றன?

குற்றவாளி”, “கைது”, “தண்டனை” என்பதோ தம் கடமைகளை முடித்துக்கொள்கின்றன? பாதி குற்றங்களில் அது கூட நடப்பதில்லை, மீதி குற்றங்கள் வெளிவருவதே இல்லை!

பெண்கள் பற்றி எப்படிப்பட்ட கருத்துடையவர்கள் policy makers ஆக இருக்கிறார்கள்? அவர்களே பிற்போக்குவாதிகளாக இருக்கையில், சராசரி ஆண்களின் சிந்தனை எப்படி இருக்க்கும்?


பெண் குழந்தைகளும், பெண்களும் இப்படி தினம் தினம் துன்புறத்தலுக்கு உள்ளாவதும் மடிவதும் சமூகத்தின் தலையாய பிரச்சினை இல்லையா? ஆனால் சமூகம் எந்த மாதிரியான விசயங்களுக்கு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது?

ராமர் கோவில் கட்டப்படுமா இல்லையா? மாட்டுக்கறியை தடை செய், ஜெய் ஸ்ரீராம் சொல்லு, துப்பட்டா போடுங்க தோழி, டைட்ஸ் போடாதீங்க தோழி, பெண்களை அடக்கி வை, மூடி வை (எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன), அந்த கோவில்ல இருக்குறது எந்த சாமி சிலை இதெல்லாம் தான் இங்கு பிரச்சினை! ஆனா எந்த சாமியும் தன்னையும், தம் புள்ளையையும் காப்பாத்த வரலன்னு எந்த அப்பன் ஆத்தாளும் யோசிக்குறதில்ல!

எத்தனை முறை இதைக் குறித்து பேசினாலும், எழுதினாலும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வேலைத்திட்டத்தில் சமூகத்தின் அடித்தளம் பற்றிய புரிதல் இருப்பதில்லை! அடித்தளத்தை மாற்றுவதற்கான வேலைக்கு பதில் சட்டத்தை கடுமையாக்கச் சொல்லி கூப்பாடு போடுவதும், குற்றவாளியை கைது செய்தோம், என்கௌண்டர் செய்தோம் என மார் தட்டிக் கொள்வதும், தூக்கில் போடு .. தூக்கில் போடு என்கிற கொலை வெறியும் தான் மேலோங்கி இருக்கிறது!

மீண்டும் சொல்கிறேன்!

அரசுகளும், பெண்கள் நல வாரியமும் சிறுமிகள், பெண்கள் பாதுகாப்போடு ஆண்களின் மனநலன் பேணுவதை முதன்மைப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண் பற்றிய சமூக கருத்தியலை மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும்.

உடலின்ப தேவைகள் மீது அவசியமற்ற கட்டுப்பாடுகளை சமூகம் கை விட வேண்டும்.
காமத்தை கொச்சைப்படுத்தும் போக்கு நீங்கி மரியாதைக்குரிய வகையில் பரஸ்பர ஒப்புதலோடு பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்வதற்கான கல்வியை கொடுக்க வேண்டும்.

உரிய வயதில் திருமணம் செய்துகொள்ள முடியாத வகையில் நிலவும் கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டும். தம்பதிகளுக்கும் கூட பாலியல் கல்வி தேவைப்படுகிறது.

கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, வாழ்க்கைத்தரம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் மனிதர்களுக்கு மேம்பட்ட வாழ்வை உறுதி செய்திட வேண்டும்

For hell's sake take the issue of Sexual Poverty, Sexual Repression, ignorance, dangerous influence of porn videos and the social stigma around sex & women, a serious issue!

பாலியல் குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிகளின் மனநிலை ஆய்வு செய்யப்பட வேண்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபட எது அவர்களுக்கு தைரியத்தை வழங்குகிறது என்பதை ஆய்வு செய்யாமல் எப்படி அதை களைவது?

Work towards proper research and sensitizing the society around gender and sex. பெண்ணை, பெண்மையை போற்றுவதை விடுத்து ஆணாதிக்கம் குறித்த அறிவூட்டி அதை ஒழிப்பதற்கான வேலையில் ஈடுபட வேண்டும்.

How the hell is any govt going to protect women and ensure safe life for children and women?

As a woman, as a mother this fear - the fear of sexual abuse, sexual exploitation, some beast waiting there wanting to tear my flesh - is haunting me every day, every minute.

Do the law makers understand the trauma that we - the women go through every minute? - the male gaze, the judgements about our dress, character, our life style, the patriarchal conditioning and the abuses, harassment we go through when we refuse to abide by that. Are they even aware of the position and the plight of women in family and the society!

As long as women are treated as Second Sex, how is just Law enough to annihilate Sexual Violence?

Do the law makers have a radical understanding about the gender bias, the patriarchal system and the materialistic reasons behind the plight of women? No! None of the STATE leaders, nor the STATE machinery have any idea about why there are "bad" men and how to make them good and how to ensure there shall be no "bad" Men! They have no idea how to #STOPSEXUALVIOLENCE , they have no idea about how to change the patrirachal-fedual society! They have no idea how to establish gender equality! Bcos they themselves believe in "feminity", "womanhood", "motherhood" and all craps that subjugates women in the name of "penmai" or biological difference!

ஆண்மை, பெண்மையை ஒழிக்க வேண்டும் என்பதன் பொருள் கூட தெரியாத policy makers தான் நம்மிடையே உண்டு!

இங்க ரெண்டு வகையான கொள்கையாளர்கள் தான் அரசு இயந்திரத்தில் உள்ளனர் - இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை என்று நேரடியாக சொல்பவர். பெண்களை, பெண்மையை போற்றுவோம், பெண் இல்லையேல் மண் இல்லை என்று புகழ்ந்து கொண்டு பெண் என்னும் இலக்கணம் மீறாமல், யார் மனதையும் “புன்படுத்தாமல்” செயல்பட சொல்பவர்கள்!

ஆணாதிக்கம் பற்றிய கூருணர்வற்ற சமூகமும், அரசும் ஒரு பக்கம் என்றால்.. மாணவிகளின் துன்பகரமான மமரணத்தைக் கூட கொச்சைப்படுத்தி பினத்தின் மீது பிழைப்பு நடத்தும் ஊடகங்கள், பேச்சாளர்கள்! எல்லாரையும் வசை பாடிட்டு இருந்தா போதும் இவர்கள் எல்லாம் சமூகத்தின் "கருத்து சொல்லிகள்", people of change!

இதுதான் இங்கு நிலவும் அறிவுச் சூழல், பண்பாட்டுச் சூழல், அரசியல் சூழல். இவர்களின் கூருணர்வற்ற அரசியல் பிழைப்பிற்கு தினம் தினம் பலி ஆவது நாங்களும், எங்கள் சகோதரிகளும், பிள்ளைகளும் தான்..

பெண்களை வாழ வைக்க வக்கற்ற சமூகம் மத நூல்களில் எழுதி வைத்தன – பெண்ணாக பிறப்பது பாவம் என்று! எல்லா பழியையும் பிறப்பின் மேல் போட்டுவிட்டால் அடக்கி வைத்தல் எளிதல்லவா? ஆனால் எழுதப்பட்ட தீர்ப்புகளை திருத்தி எழுதத்தான் தலைமைகள் இல்லை!

பிறக்கும் போதே யாரும் கெட்டவரக்ளாக பிறப்பதில்லை! ஒரு ஆண் (மனிதர்கள் அனைவரும்) ஏன் கொடூர மனம் படைத்தவனாகின்றான் என்னும் சமூகக் காரணியை ஆய்வு செய்யாமல் அதை மாற்றுவதற்கான வேலையில் ஈடுபடாமல் “நல்ல ஆண்களை’ உருவாக்க இயலாது!

A human life born on this earth is made a Man, Woman & an Economic Slave and not a Human Being! But all that matters to the Ruling Class is its Power & Profit!

யாரும் மாற வேண்டாம்... அவரவர் பிழைப்புவாதம் தொடரட்டும்!

இதோ இந்த பதிவின் கீழே வரப் போகும் கமெண்டுகள் உணர்த்தும் நீங்க செய்யவேண்டியது என்ன என்பதை!

ஆணாதிக்கத்தை ஒழிக்க கையாலாகாத அரசுகள் ஆளும் ஒரு நாட்டில் எல்லா நேரமும் பயத்துடனே வாழும் பெண்ணாகிய நான் எனது உடலை கை விடும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

- #கொற்றவை, 8.6.2022



Monday, July 25, 2011

பெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ


..... மேலைப் பெண்ணுக்கும் கீழைப் பெண்ணுக்கும் இடையிலான வேறுபாடுக் குறித்த காரணங்களில் முதலாவது காரணம் காரல் மார்க்ஸ். வறுமைக்கும், போன ஜென்மம், விதி, தலையெழுத்து இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் ஏழையாயிருக்க வேண்டும், யார் பணக்காரனாயிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கடவுள் அல்ல, சமூகப் பொருளாதார அமைப்பே யார் ஏழையாகப் போகிறார் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த அமைப்பை மாற்ற முடியும். ஏனென்றால் இது கடவுளால் படைக்கப்பட்டதல்ல, மனிதரால் உண்டாக்கப்பட்டது. உண்மையில் கடவுள் என்று ஒருவர் இல்லை என்ற கருத்துக்களை காரல் மார்க்ச் உலகம் முழுவதிலுமுள்ள அறிவாளி வர்க்கத்தின் முன் வைத்து அக்கருத்துக்களை அவர்கள் ஏற்கும்படி செய்தார்.

காரல் மார்க்சின் கருத்து சரியே என்பதை பரிசோதனை அடிப்படையில் ருசியப் புரட்சி நிரூபித்தது. அதாவது இந்த அமைப்பை மாற்ற முடியும். அரசர்கள் ஆண்டிகளாக முடியும். ஆண்டிகள் அரசர்களாக முடியும். கடவுள் இதில் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. ‘இப்படி நீங்கள் செய்யக் கூடாது. அவர்கள் தலையில் நான் எழுதியதை உங்களால் மாற்ற முடியாது’ என்றெல்லாம் கூறவில்லை.

ருசியாவில் ஜாரின் குடும்பம் முழுவடும் ஆண்கள், பெண்கள், முதியவர், இளையவர், குழந்தைகள், ஆறுமாதமே ஆன பச்சைக் குழந்தை, 95 வயதான கிழவன் ஆக மொத்தம் அரச குடும்பத்தைச் சேர்ந்த பத்தொன்பது பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டார்கள். அப்போது கடவுள் குறுக்கிட்டு ‘இந்தக் குடும்பத்தை என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? அது நான் எடுத்த முடிவு. ஏறக்குறைய உலகின் ஆறில் ஒரு பங்குக்கு நான் சொந்தக்காரர்களாக்கிய அவர்களை நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்கவில்லை. அக்காலத்தில் ருசியப் போரரசே மிகப்பெரிய பேரரசாக இருந்தது. ஜாரே உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்தான்.

ஆக முதல் சம்மட்டி அடி காரல் மார்க்சிடமிருந்து வந்தது. இரண்டாவது சம்மட்டி அடியோ சிக்மண்ட் பிராய்டிடமிருந்து வந்தது. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்; பெண்களைக் கண்டனம் செய்யும் எவ்விதக் கோட்பாடுகளும் தத்துவங்களும் முற்றிலும் மனிதத் தன்மை அற்றவை, ஆணதிக்க வெறி கொண்டவை இவ்வாறு அறிவித்தார் பிராய்டு. அடுத்து மூன்றாவதான கடைசி சம்மட்டி அடியோ மாஸ்டர்ஸ் ஜான்சனின் ஆராய்ச்சிகளில் இருந்து வந்தது. பெண்ணானவள் நூற்றாண்டுகளாக உடலுறவின் உச்சத்தை அனுபவிக்க விடாமலே தடுக்கப்பட்டு வந்திருக்கிறாள். உண்மையாகவே தன் நடத்தையில் மனிதத் தன்மையற்றவளாகவே பாலியல் தேவைகளுக்காகவே பெண்ணை அவன் பயன்படுத்தினான். ஆனால் அதே காமத்தை பெண் அனுபவிக்க அவன் அனுமதிக்கவில்லை.

இந்த மூன்று விஷயங்களும் மேற்கின் மொத்த சூழலையே மாற்றி இருக்கிறது. ஆனால் கிழக்கின் மரபுரீதியான மனத்தை இம்மூன்று விஷயங்களும் இன்னும் ஊடுருவவே இல்லை. இவற்றின் விளைவாக மேலைப் பெண்மணி போர்ப் பாதையில் இருக்கிறாள். ஆனால் அது எதிர்வினை நிகழ்வுதான். எனவே பெண்விடுதலை என்ற பெயரில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை நான் ஆதரிப்பதில்லை.

பெண்கள் விடுபட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால் எதிர்க்கோடிக்கு போய்விடுவதை விரும்பவில்லை. பெண்கள் விடுதலை இயக்கம் எதிர்க் கோடிக்கு போய்க்கொண்டிருக்கிறது, பழிவாங்கத் துடிக்கிறது. ஆண் தனக்குச் செய்ததையே அவனுக்குத் திருப்பிச் செய்ய முயலுகிறது. இது சுத்த மடத்தனம். நடந்தது நடந்து விட்டது. இப்போது அது இல்லை. ஆண் தான் செய்ததை எல்லாம் தன்னுணர்வில்லாமலேயே செய்து விட்டான். பெண்களூக்கு எதிராக தெரிந்தே சதி செய்யவில்லை. அவனும் உணர்வுடன் இல்லை. பெண்ணும் உணர்வுடன் இல்லை.

...............................

..................................

கடந்த காலம் முழுவதும் எல்லாவிதமான தவறுகளாலும் நிரம்பியுள்ளது. கடந்தகாலத்திலிருந்து விடுபடுங்கள். எல்லாவற்றையும் ஆண் பெண் உறவு உள்பட புதிய கண்டுபிடிப்புகளின் ஒளியில் புதியதாய் தொடங்குங்கள். கடந்த காலத்தில் நடந்த எந்த அசிங்கமும் இல்லாமல் வாழ்க்கை ஒரு அழகிய அனுபவமாக, ஆனந்த நடனமாக இருப்பதற்கான வழிகளை இருவரும் சேர்ந்தே கண்டுபிடியுங்கள். பழைய தவறை திரும்பச் செய்யாதீர்கள். அப்படிச் செய்வது கடிகார ஊசலின் இயக்கத்தைப் போலவே ஆகிவிடும். முன்பு ஆண் மடத்தனமான காரியங்களைச் செய்தான். இப்போது பெண்ணும் அதே மடத்தனங்களையே செய்வாள் (என்றாகிவிடும்).

ஆனால் மனித இனம் முழுவதுமே தொடர்ந்து துன்பப் பட்டுக் கொண்டே இருக்கிறது. மடத்தனமான செய்கையை யார் செய்தார் என்பது முக்கியமில்லை. ஆனால் மனிதகுலம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையாமலே இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒரு ஒத்த புரிதலுக்கு வந்தாக வேண்டும். கடந்த காலத்தை அவர்கள் மன்னித்து மறந்து விட வேண்டும். ஒன்றை மட்டும் அவர்கள் நிணைவில் கொள்ளட்டும். அதாவது பெண் ஆணைப் போலவே நடித்து போலியாகக் கூடாது. ஏனென்றால் அவளுடைய கவர்ச்சிக்கும் அழகுக்கும் ஒரு வித்தியாசமான பரிமாணம் இருக்கிறது.

...................................

.........................(பக். 16-19) பெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் ஓஷோ

தமிழாக்கம்: சிங்கராயர், சுவாமி அம்ரித் யாத்ரி, கவிதா வெளியீடு.

//ஆண் தான் செய்ததை எல்லாம் தன்னுணர்வில்லாமலேயே செய்து விட்டான். பெண்களூக்கு எதிராக தெரிந்தே சதி செய்யவில்லை. அவனும் உணர்வுடன் இல்லை. பெண்ணும் உணர்வுடன் இல்லை.

...............................

..................................

கடந்த காலம் முழுவதும் எல்லாவிதமான தவறுகளாலும் நிரம்பியுள்ளது. கடந்தகாலத்திலிருந்து விடுபடுங்கள். எல்லாவற்றையும் ஆண் பெண் உறவு உள்பட புதிய கண்டுபிடிப்புகளின் ஒளியில் புதியதாய் தொடங்குங்கள்//

இதை தட்டையாக அப்படியே புரிந்து கொண்டால் ஆத்திரமூட்டும் உணர்வுகள் ஏற்படக்கூடும். ஒவ்வொரு ஆணும் பெண்ணுக்கெதிரானவன் அல்ல, பல்வேறு காரணங்கள், குறிப்பாக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஆகியவை மனித மனதை எவ்வாறு கையாள்கிறது அல்லது கையாண்டது எனும் கோணத்தில் விரிவாக பேசவேண்டிய ஒரு கருத்து அது என்பதாக நான் உணர்கிறேன்.

அதேபோல் கடந்த காலத்திலிருந்து விடுபடுங்கள் என்பதிலும் வரலாற்றை புறக்கணித்து விட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு கைகுலுக்கிக் கொண்டு நண்பர்களாகி விடுவேண்டும் என்பதல்ல (முடிவு அவ்வாறாகத்தான் இருக்க வேண்டும்). ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டிருக்காமல், கடந்த கால வரலாற்றை, அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலாறும் கற்று ஆய்ந்து தீர்வை காண வேண்டும், கண்ட பின்பு கடந்த காலத்திலேயே உழல்வது அவசியமில்லை என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.

Thursday, October 21, 2010

அன்புள்ள டாக்டர் மார்க்ஸ்.........


அன்புள்ள டாக்டர் மார்க்ஸ் – ஒரு சோசலிசப் பெண்ணிலையாளரின் கடிதம், வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை, விடியல் பதிப்பகம். (1999)

அன்னெத் தெவ்ரு எனும் கற்பனைக் கதாபாத்திரம், 1851இல் மார்க்ஸிற்க்கு எழுதும் கடிதமாக வரைந்திருக்கிறார் ஷீலா ரௌபாத்தம். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைப் பட்டியல் பின் வருமாறு:

”ஆகாயத்தில் கோட்டை கட்டுவது, உங்களுக்குப் பிடிக்காது என்று எனக்குத் தெரியும். எனவே, எங்களது செயல்பாடுகளின் அடிப்படைகள், நாங்கள் உருவாக்கியுள்ள கோரிக்கைகளின் பட்டியலை இங்கு தந்து என் கடிதத்தை முடித்துக்கொள்கிறேன்.

  • பெண்களுக்கு சரிசமமான குடிமை உரிமைகள், அரசியல் உரிமைகள்.
  • தொழிலாளர் குழுக்களில் பெண்களுக்குச் சம பங்கேற்பு.
  • பெண்களுக்குச் சம ஊதியம்; பெண்களுக்கு குறைந்த ஊதியம் தரப்படும் பழக்கத்தை நிறுத்துதல்; நீண்ட வேலை நேரத்தைக் குறைத்தல்; சில தொழில்களைச் செய்வதிலிருந்து பெண்களை விலக்கி வைத்தலை நிறுத்துதல்.
  • வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்குத் தொழிற்கூடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குத் தரப்படும் அதே விகிதத்தில் ஊதியம் வழங்குதல்.
  • வேலையில்லாத் திண்டாட்டம் உள்ள காலங்களில் வேலையைப் பகிர்ந்து கொள்ளுதல்.
  • விலைமாதருக்கு மாற்று வேலை வாய்ப்பு.
  • வேலை செய்யும் இடங்கள் எல்லாவற்றிலும் உணவு விடுதிகள், குழந்தைக் காப்பகங்கள்.
  • மருத்துவச்சிகள் உட்பட அணைத்துப் பெண்களுக்கும் பயிற்சி மையங்கள்.
  • வீட்டு வேலை செய்யும் பணியாட்கள் சந்திக்கவும் ஒழுங்கமைத்துக் கொள்ளவும் மையங்கள் ஏற்படுத்துதல்.
  • பெண் தொழிலாளர்கள், ஆண் தொழிலாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து (தொழில் தொடங்க) மூலதனம் பெறுவதற்காகச் சங்கங்களை உருவாக்குதல்.
  • நல்ல வேலை நிலைமைகள்.
  • கடினமான காலங்களில் உழைப்பைக் கொடுத்து, அதற்குப் பதிலாக உணவையும் பாதுகாப்பையும் பெறுவதற்கான வழிமுறைகள்; இலக்கியம், கலை ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டும், கலைகளில் ஈடுபாட்டை வளர்க்கவும் இலக்கிய, கலைச் சங்கத்தை உருவாக்குதல்; வேலையில்லாப் பெண்களுக்கு ம் கூட ஒரு சங்கத்தை உருவாக்குதல்.
  • குழந்தைகள் உள்ள குடும்பங்கள், குழந்தைகளோடு தனியாக வாழும் தாய்மார்கள் அல்லது தந்தைமார்கள் வாழ்வதற்கேற்ற தோட்டமுள்ள, பெரிய, காற்றோட்டமான, பொது சமையல் அறைகள் உள்ள வீடுகள்.
  • பொது உணவு விடுதிகள், குளியல் அறைகள், கூட்டம் கூடுவதற்கான பொது அறைகள், பொது நூலகங்கள், பொது குழந்தைக் காப்பகங்கள், பொழுதுபோக்குக்கான பொது இடங்கள்.
  • பெண் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமான பொதுக் கல்வியும் பயிற்சியும்.
  • ஏழைக் கர்பிணிப் பெண்களை மரியாதையுடன் நடத்தும் ஒரு சமூக நலத்திட்டம்.
  • இலவசமான மருத்துவச் சேவை. மருத்துவச்சிகளுக்கு அரசு ஊதியம் வழங்குதல்.
  • ஆண்களைச் சார்ந்துதான் பெண்கள் இருக்க வேண்டும் என்ற நிலைமையைப் போக்கும் வகையில் பெண்களுக்கு நிதியுதவி செய்கிற ஒரு சமூக நிதியம்.
  • விருப்பப்படால் மட்டுமே பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல்.
--------- ………………. சென்ற ஆண்டின் கோடைக் காலத்தில் நடந்த அமெரிக்கப் பெண்கள் மாநாட்டிற்கு போலின் ரோலானும் ழான் தெர்வானும் எழுதிய கடிதம் எனக்கு உற்சாகமூட்டுவதாக உள்ளது: “அமெரிக்கச் சகோதரிகளே! குடிமைச் சமத்துவம், அரசியல் சமத்துவம் ஆகியவற்றுக்கான பெண்களின் உரிமைகளின் நியாத்தை உயர்த்திப் பிடிப்பதில் பிரான்சிலுள்ள உங்களுடைய சோசலிசச் சகோதரிகள் உங்களோடு ஒன்றுபட்டுள்ளனர். ஒருமைப்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்படும் கூட்டுறவின் வலிமையின் மூலமாகத்தான் – அதாவது உழைப்பை ஒழுங்கமைப்பதில் உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்த ஆண், பெண் ஆகிய இரு பாலாரும் உருவாக்கும் சங்கத்தின் மூலமாகத்தான் சமத்துவத்தையும், பெண்களின் குடிமை மற்றும் அரசியல் சமத்துவத்தையும், அணைவரது சமூக உரிமையையும் முழுமையாகவும் அமைதி வழியிலும் பெற முடியும் என்று நாங்கள் ஆழமாக நம்புகிறோம்.:

’விடுதலைக்கான போராட்டத்தில்

உங்களுடன் உண்மையாக நிற்கும்

அன்னெத் தெவ்ரு

Monday, September 13, 2010

ஒளவை.


நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே – (187)

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று கூறப்பட்ட உரைக்கு மாற்றுக்கருத்தாக தமிழண்ணல் எழுதி சாகித்ய அகாதெமி பதிப்பான ஒளவையார் நூலிலிருந்து.

நாடோ, காடோ, பள்ளமோ, மேடோ எதுவானாலும் அவற்றால் எல்லாம் நிலம் நல்லது, கெட்டது ஆவதில்லை. எங்கு ஆடவர்கள் நல்லவர்களாக உள்ளனரோ, அங்கு நிலனே நீயும் நல்லை! வாழிய!

இயற்கையால் நன்மைதான் விளையும். பெண்களாலும் உலகிற்கு நன்மையே உளதாகும். தம்மையும் கெடுத்துக்கொண்டு, பிறரையும் கெடுப்பவர்கள் ஆடவர்களே. அதனால் ஆடவர் நல்லவராய் இருந்தால் உலகம் நல்லதாக இருக்கும், அவர்கள் கெட்டவர்களானால் உலகமும் கெட்டழியும் !

இதற்கு ’மக்கள்’ எனப் பொதுவாகப் பொருள் கொண்டு, எங்கே மக்கள் நல்லவரோ அங்கே உலகமும் நல்லதாக இருக்கும் என பொருள் கொள்ளலாம். ஆயினும், பாடலில் ஆளும் உரிமையைக் கையில் எடுத்துக்கொண்டு வலிமையால் ஆட்டிப்படைக்கும் ஆடவரையே, அவர் நயமாக இடித்துப் பேசுகிறார்.

ஆடவர் என்பதற்கு வல்லமையுடையோர்- வெற்றியை ஆளும் திறனுடையோர்- என்று கொண்டால், காரணப்பெயராய் இரு சாராரிலும் தலைமை தாங்குவோரைக் குறிக்க வாய்ப்புள்ளது. ஒரு நாடு சிறந்த நாடென பெயர் பெறுவதற்கு, மக்களுக்கு வழிக்காட்டவல்ல காரணம் எனக் கருதலாம். எங்கனமாயினும் உலகளாவிய கருத்தரங்கொன்று வைத்துப் பலர் கூடி விவாதிப்பதற்குரிய ’செய்தியை’ ஒளவையார் நான்கே அடிகளில் கூறிச்சென்றுள்ளார்.