Monday, September 20, 2010

பெண் பால்..


ஆண் பிள்ளை - ஆண் குழந்தை, கெட்டிக்காரன், தலைவன், மனிதன், ஆண்பிள்ளை சிங்கம், வீரன்

பெண் பிள்ளை - சிறுமி, பெண், மணவாட்டி

ஆண் - ஆண்பாற்பொது, ஆண்மகன், தலைமை

பெண் - கற்றாழை, ஸ்த்ரி, மனைவி, விலங்கின் பெண் பொது.

அகராதியில் பெண்போகம் என்று ஒரு சொல் இருக்கிறது, ஆண் போகம் என்று காணமுடியவில்லை.....

ஆண் என்றால் ஆண்பாற்பொதுவாம்...பெண் என்றால் விலங்கின் பெண் பொதுவாம்....

மனு ஸ்மிருதி, பெண்ணை சூத்திரனுக்கு இணையானவள் என்கிறது..அவளுக்கு நரகமே கிட்டுமாம்...சொர்கம் வேண்டுமெனில் அவள் கடும் தவங்கள் புரிந்து, பத்தினியாய் செயல்பட்டு...ஆணைத் தொழுது, ஆண் கடவுள்களை திருப்தி செய்து அடுத்த பிறவியில் ஆணாய் பிறந்தால் சொர்கத்திற்கு வாய்ப்பிருக்கிறதாம்...

(சூத்திரன் என்ற சொல்லை / பிறப்பை நான் இழிவாக கருதவில்லை. அப்பகுப்புகளை / சொல்லை பெரியார் ஐய்யா வழியிலேயே நின்று நானும் எதிர்கிறேன். )

பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த நம் பாரதியார் கூட காணி நிலம் வேண்டும் என்ற பாடலில் பாட்டுக் கலந்திடவே அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்” என்றல்லவா கேட்கிறார்?

பத்தினி என்பதற்கு மனைவி / இல்லாள் என்றொரு பொருள் இருப்பதாகவும், அவர் அப்பொருளில் கூறுவதாக வியாக்யானம் செய்யலாம்.....ஆனால் அவர் ஏன் பத்தினிப் பெண் என்று குறிப்பிடுகிறார். அவர் பார்வையில் பத்தினிப் பெண் என்பவள் யார்?

அதே அகராதியில்...பத்தினி என்றால் கற்புடையவள் என்றும் பொருள் கூறப்பட்டிருக்கிறது.......

(*நா. கதிர்வேற் பிள்ளையின் தமிழ் மொழி அகராதி)


No comments:

Post a Comment