Monday, November 8, 2010

ஆப்பிள் புகையாவதுபோல்.....


நான் வருந்துவதில்லை நான் அழுவதோ அழைப்பதோ இல்லை
ஆப்பிள் மலர்ந்து புகையாவது போல் எல்லாம் கடந்து செல்லும்
என் ஆத்மா
இலையுதிர்கால தங்கச் சாயலைக் கொண்டிருக்கிறது
மேலும்
என் இளமையை திரும்பப்பெற இயலாது

ஏற்கணவே குளிரால் கலங்கும் என் இதயம்
கிளர்ந்திருக்கிற துடிப்பை வைத்திருக்கப்போவதில்லை
அது
பூச்சைக்காடுகளின் அதிசய உலகம்
என் வெறுமைக் கால்கள் அழுந்தி நடந்திட வசீகரிக்கப்போவதில்லை

அமைதியற்ற என் ஆவி சிறிது, சிறுது எப்போதாவது
கட்டுக்கடங்காத என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தூண்டியது
கிளர்ச்சி மடிந்துவிட்டது, உணர்ச்சி துடித்துடிப்பு மென்மையாகிவிட்டது
மேலும் பசுமையான உணர்ச்சிகள் நீண்ட காலமாய் செலவாகிறது

வேட்கைகள் இப்போது என்னை சற்று விட்டுவைத்திருக்கிறது
நான் வாழ்க்கையை கணவுக் கண்டேனா அல்லது உண்மையாகவே வாழ்ந்தேனா?
இளவேனிற் பருவத்தின் அதிகாலையில்
மணிச்சத்தம் கூடிய காற்றில் அழகான இளஞ்சிவப்பு குதிரையின் மீதேரி
நான்கு கால் பாய்ச்சலில் கடந்துவிட்டேன் போலும்

இவ்வுலகில் எல்லோரும் மறிக்ககூடியவர்களே
பலம் குன்றிப்போன நம்பிக்கைகளை வளரச்செய்யும் வரம் தர
மேப்பில் மரத்திலிருந்து
இப்போதும் கூட
செம்பு மென்மையாக வழிகிறது

இப்பொழுதும் எப்பொழுதும்
என் விதி
வாழ்த்துக்குரியதாகும்



- கவிதை மூலம் SERGEI YESININ (1895- 1925) russian federation, ரஷ்யனிலிருந்து ஆங்கிலத்திற்கு OLGA SHARTSE தமிழில் கொற்றவை.

நூல் - land of the soviets in verse and prose.

No comments:

Post a Comment