Friday, August 5, 2022

பெண் உடல் என்பது வெறும் உடல் அல்ல!



 பெண் உடல் என்பது வெறும் உடல் அல்ல! ஏற்றிவைக்கப்பட்டிருக்கும் ஆதிக்க கருத்தியல்களின் உருவகம்!

மது போதையில் மூதாட்டியிடம் முத்தம் கேட்டு இளைஞர் தாக்கினார்!
63 வயது முதியவர் 12 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இன்னொரு பக்கம் மாணவிக்கு ஆசிரியர்(கள்) பாலியல் தொல்லை கொடுத்ததால் மாணவி (கள்) தற்கொலை!
வல்லுறவுக்கு எதிராக புகார் கொடுத்து தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி பெயிலில் வெளியே வந்து பழி வாங்க அதே பெண்ணை கூட்டுப் பாலியல் வன்முறை செய்தார்!

என்று தினம் தினம் பாலியல் குற்றங்கள் பற்றிய செய்தி வந்து கொண்டிருக்கிறது. சிறுமிகள், பெண்களுக்கு எதிராக கொடூரமான கொலைகள், தற்கொலைகள், துன்புறுத்தல்கள் இல்லாத நாளே இல்லை. ஆனால் அரசுகள் என்ன செய்கின்றன?

குற்றவாளி”, “கைது”, “தண்டனை” என்பதோ தம் கடமைகளை முடித்துக்கொள்கின்றன? பாதி குற்றங்களில் அது கூட நடப்பதில்லை, மீதி குற்றங்கள் வெளிவருவதே இல்லை!

பெண்கள் பற்றி எப்படிப்பட்ட கருத்துடையவர்கள் policy makers ஆக இருக்கிறார்கள்? அவர்களே பிற்போக்குவாதிகளாக இருக்கையில், சராசரி ஆண்களின் சிந்தனை எப்படி இருக்க்கும்?


பெண் குழந்தைகளும், பெண்களும் இப்படி தினம் தினம் துன்புறத்தலுக்கு உள்ளாவதும் மடிவதும் சமூகத்தின் தலையாய பிரச்சினை இல்லையா? ஆனால் சமூகம் எந்த மாதிரியான விசயங்களுக்கு கொந்தளித்துக் கொண்டிருக்கிறது?

ராமர் கோவில் கட்டப்படுமா இல்லையா? மாட்டுக்கறியை தடை செய், ஜெய் ஸ்ரீராம் சொல்லு, துப்பட்டா போடுங்க தோழி, டைட்ஸ் போடாதீங்க தோழி, பெண்களை அடக்கி வை, மூடி வை (எல்லா மதங்களும் இதைத்தான் சொல்கின்றன), அந்த கோவில்ல இருக்குறது எந்த சாமி சிலை இதெல்லாம் தான் இங்கு பிரச்சினை! ஆனா எந்த சாமியும் தன்னையும், தம் புள்ளையையும் காப்பாத்த வரலன்னு எந்த அப்பன் ஆத்தாளும் யோசிக்குறதில்ல!

எத்தனை முறை இதைக் குறித்து பேசினாலும், எழுதினாலும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வேலைத்திட்டத்தில் சமூகத்தின் அடித்தளம் பற்றிய புரிதல் இருப்பதில்லை! அடித்தளத்தை மாற்றுவதற்கான வேலைக்கு பதில் சட்டத்தை கடுமையாக்கச் சொல்லி கூப்பாடு போடுவதும், குற்றவாளியை கைது செய்தோம், என்கௌண்டர் செய்தோம் என மார் தட்டிக் கொள்வதும், தூக்கில் போடு .. தூக்கில் போடு என்கிற கொலை வெறியும் தான் மேலோங்கி இருக்கிறது!

மீண்டும் சொல்கிறேன்!

அரசுகளும், பெண்கள் நல வாரியமும் சிறுமிகள், பெண்கள் பாதுகாப்போடு ஆண்களின் மனநலன் பேணுவதை முதன்மைப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பெண் பற்றிய சமூக கருத்தியலை மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும்.

உடலின்ப தேவைகள் மீது அவசியமற்ற கட்டுப்பாடுகளை சமூகம் கை விட வேண்டும்.
காமத்தை கொச்சைப்படுத்தும் போக்கு நீங்கி மரியாதைக்குரிய வகையில் பரஸ்பர ஒப்புதலோடு பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்வதற்கான கல்வியை கொடுக்க வேண்டும்.

உரிய வயதில் திருமணம் செய்துகொள்ள முடியாத வகையில் நிலவும் கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டும். தம்பதிகளுக்கும் கூட பாலியல் கல்வி தேவைப்படுகிறது.

கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, வாழ்க்கைத்தரம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் மனிதர்களுக்கு மேம்பட்ட வாழ்வை உறுதி செய்திட வேண்டும்

For hell's sake take the issue of Sexual Poverty, Sexual Repression, ignorance, dangerous influence of porn videos and the social stigma around sex & women, a serious issue!

பாலியல் குற்றங்கள் ஏன் நடக்கின்றன என்பது பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிகளின் மனநிலை ஆய்வு செய்யப்பட வேண்டும். பாலியல் அத்துமீறலில் ஈடுபட எது அவர்களுக்கு தைரியத்தை வழங்குகிறது என்பதை ஆய்வு செய்யாமல் எப்படி அதை களைவது?

Work towards proper research and sensitizing the society around gender and sex. பெண்ணை, பெண்மையை போற்றுவதை விடுத்து ஆணாதிக்கம் குறித்த அறிவூட்டி அதை ஒழிப்பதற்கான வேலையில் ஈடுபட வேண்டும்.

How the hell is any govt going to protect women and ensure safe life for children and women?

As a woman, as a mother this fear - the fear of sexual abuse, sexual exploitation, some beast waiting there wanting to tear my flesh - is haunting me every day, every minute.

Do the law makers understand the trauma that we - the women go through every minute? - the male gaze, the judgements about our dress, character, our life style, the patriarchal conditioning and the abuses, harassment we go through when we refuse to abide by that. Are they even aware of the position and the plight of women in family and the society!

As long as women are treated as Second Sex, how is just Law enough to annihilate Sexual Violence?

Do the law makers have a radical understanding about the gender bias, the patriarchal system and the materialistic reasons behind the plight of women? No! None of the STATE leaders, nor the STATE machinery have any idea about why there are "bad" men and how to make them good and how to ensure there shall be no "bad" Men! They have no idea how to #STOPSEXUALVIOLENCE , they have no idea about how to change the patrirachal-fedual society! They have no idea how to establish gender equality! Bcos they themselves believe in "feminity", "womanhood", "motherhood" and all craps that subjugates women in the name of "penmai" or biological difference!

ஆண்மை, பெண்மையை ஒழிக்க வேண்டும் என்பதன் பொருள் கூட தெரியாத policy makers தான் நம்மிடையே உண்டு!

இங்க ரெண்டு வகையான கொள்கையாளர்கள் தான் அரசு இயந்திரத்தில் உள்ளனர் - இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை என்று நேரடியாக சொல்பவர். பெண்களை, பெண்மையை போற்றுவோம், பெண் இல்லையேல் மண் இல்லை என்று புகழ்ந்து கொண்டு பெண் என்னும் இலக்கணம் மீறாமல், யார் மனதையும் “புன்படுத்தாமல்” செயல்பட சொல்பவர்கள்!

ஆணாதிக்கம் பற்றிய கூருணர்வற்ற சமூகமும், அரசும் ஒரு பக்கம் என்றால்.. மாணவிகளின் துன்பகரமான மமரணத்தைக் கூட கொச்சைப்படுத்தி பினத்தின் மீது பிழைப்பு நடத்தும் ஊடகங்கள், பேச்சாளர்கள்! எல்லாரையும் வசை பாடிட்டு இருந்தா போதும் இவர்கள் எல்லாம் சமூகத்தின் "கருத்து சொல்லிகள்", people of change!

இதுதான் இங்கு நிலவும் அறிவுச் சூழல், பண்பாட்டுச் சூழல், அரசியல் சூழல். இவர்களின் கூருணர்வற்ற அரசியல் பிழைப்பிற்கு தினம் தினம் பலி ஆவது நாங்களும், எங்கள் சகோதரிகளும், பிள்ளைகளும் தான்..

பெண்களை வாழ வைக்க வக்கற்ற சமூகம் மத நூல்களில் எழுதி வைத்தன – பெண்ணாக பிறப்பது பாவம் என்று! எல்லா பழியையும் பிறப்பின் மேல் போட்டுவிட்டால் அடக்கி வைத்தல் எளிதல்லவா? ஆனால் எழுதப்பட்ட தீர்ப்புகளை திருத்தி எழுதத்தான் தலைமைகள் இல்லை!

பிறக்கும் போதே யாரும் கெட்டவரக்ளாக பிறப்பதில்லை! ஒரு ஆண் (மனிதர்கள் அனைவரும்) ஏன் கொடூர மனம் படைத்தவனாகின்றான் என்னும் சமூகக் காரணியை ஆய்வு செய்யாமல் அதை மாற்றுவதற்கான வேலையில் ஈடுபடாமல் “நல்ல ஆண்களை’ உருவாக்க இயலாது!

A human life born on this earth is made a Man, Woman & an Economic Slave and not a Human Being! But all that matters to the Ruling Class is its Power & Profit!

யாரும் மாற வேண்டாம்... அவரவர் பிழைப்புவாதம் தொடரட்டும்!

இதோ இந்த பதிவின் கீழே வரப் போகும் கமெண்டுகள் உணர்த்தும் நீங்க செய்யவேண்டியது என்ன என்பதை!

ஆணாதிக்கத்தை ஒழிக்க கையாலாகாத அரசுகள் ஆளும் ஒரு நாட்டில் எல்லா நேரமும் பயத்துடனே வாழும் பெண்ணாகிய நான் எனது உடலை கை விடும் நாளுக்காக காத்திருக்கிறேன்.

- #கொற்றவை, 8.6.2022



Sunday, December 2, 2018

"உழைக்கும் மகளிர்” - நூல் வெளீடு


வணக்கம் தோழர்களே,

எவ்வளவு வன்மத்தை இந்த சமூக ஊடகம் (சமூகமும்) அள்ளித் தெளித்தாலும், அதன் நேர் எதிர் திசையில் உலகெங்கிலும் இருந்து முகமறியா நபர்கள் மற்றும் நண்பர்கள், தோழர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் எல்லாவற்றுக்கும் மேலாக பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மீதான அலாதியான நம்பிக்கையும் காதலும் என்னை தொடர்ந்து எழுத்தின் வாயிலாக இயங்கச் செய்துகொண்டே இருக்கிறது J

மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் இப்படித்தான் நிகழ்ந்தது. இப்போது நான்காவதாக ஒரு சிறு நூல் ஒன்றை மொழிபெயர்த்துள்ளேன்.  சிந்தன் பதிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவர இருக்கிறது. 

உழைக்கும் மகளிர்” – தோழர் ந.கா. க்ரூப்ஸ்கயா எழுதி, தோழர் மிக் கொஸ்த்தெலொ அவர்களின் மொழிபெயர்ப்பில் மேனிஃபெஸ்டோ ப்ரெஸ் (இங்கிலாந்து) வெளீடாக வந்த இந்நூல் உரிமம் பெற்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

வரும் 9ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு #கூகை நூலகத்தில் வெளீட்டு நிகழ்வை திட்டமிட்டிருக்கிறோம். அதுகுறித்தான விவரங்கள் விரைவில் பகிர்கிறேன். கால அவகாசம் குறைவாக உள்ளதால் உங்கள் அனைவரின் நாட்காட்டியில் இந்த நாளையும் நேரத்தையும் குறித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இதை எனது நேரடியான அழைப்பாக்க் கருதி நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பாட்டாளி வர்க்கப் புரட்சி ஓங்குக! மார்க்சியமே சமூக விடுதலையின் ஒளிவிளக்கு. 

க்ருப்ஸ்கயாவும் உழைக்கும் மகளிர்நூலும்

நதேழ்தா கான்ஸ்டாண்டினோவா க்ரூப்ஸ்கயா (1869 – 1939), லெனின் என்னும் ஆளுமை மீதான பரவலான ஈர்ப்பால் மற்றுமொரு ஒரு புரட்சியாளர், கட்டுரையாளர் என்று குறைத்து மதிப்பிடப்பட்டதோடு துரதிர்ஷ்டவசமாக பலராலும்லெனினின் மனைவிஎன்று மட்டுமே அறியப்பட்டவர்.

கல்வியாளராக அவர் ஒரு தனித்துவமான ஆளுமை என்றபோதும் க்ரூப்ஸ்கயாவின் எழுத்துகள் இதுவரை ஆங்கிலத்தில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. புரட்சியின் முதல் நாளிலிருந்தே அவர் தன்னை புரட்சிகர பணிகளில் இணைத்துக்கொண்டார்….

…. 1896இல் லெனினோடு கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டு பின்னர் ஷூசென்ஸ்கொயேவில் மூன்றாண்டுகள் உள்நாட்டு சிறைத் தண்டனையை அனுபவித்த போது க்ரூப்ஸ்கயா முதல் முதலாக எழுதியதேஉழைக்கும் மகளிர்என்னும் சிறு பிரசுரம்.
…. ருஷியப் பெண்களின் நிலை குறித்து வெளியான முதல் மார்க்சியப் படைப்பு என்னும் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சிறு பிரசுரம். ஜாரிசத்தின் கீழ் பெண்களின் உரிமையற்ற நிலையை ஆசிரியர் மிகவும் ஆழமாக ஆய்வு செய்கிறார். ஆண் உழைப்பாளர்களுக்கு நிகராக, சமமாகவும், மேலான வாழக்கைக்காகவும் போராடுபவர்களின் அணியில் சேரும்படி அவர் பெண்களுக்கு அழைப்பு விடுக்கிறார். “உழைக்கும் மகளிரும் உழைக்கும் வர்க்கத்தின் உறுப்பினர்களே. அவர்களது நலன்களும் அவ்வர்க்கத்தின் நலன்களோடு நெருக்கமாகப் பிணைந்துள்ளன.”

இந்தச் சிற்றேடு க்ரூப்ஸ்கயா விளக்கும் விடுதலைக்கான பாதையை விரிவாக ஆய்வு செய்ய முற்படுகிறது. அவர் காலத்தில் வாழ்ந்த பெண் உழைப்பாளர்களின் நிலைமைகளை விளக்கி வந்த இந்நூல் க்ரூப்ஸ்கயாவின் மார்க்சியக் கண்ணோட்டத்தைச் சிறப்பாக வெளிக்காட்டுகிறது. இதில் அவர் குறிப்பிடும் நிலைமைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்கால ரஷ்யாவைப் பற்றிய வரலாற்றாசிரியர்களுக்கான ஆய்வுகளுக்காக மட்டுமின்றி இன்றைய உலகின் நிலைமைகளுக்கும் பெருமளவில் பொருந்திப் போகிறது. எவ்வித மாற்றங்களுமின்றி 26 வருடங்கள் கழித்து அப்படியே இந்நுல் வெளியாகிறது என்பதே அதன் பொருத்தப்பாட்டிற்கான சான்றாகும்.

தொழிலாளர்களின் நலனுக்காக பெண்கள் தோளோடு தோள் நின்று போராடினால் மட்டுமேசுதந்திரமான இன்பகரமான வாழ்க்கைக்கான சாவியைபெண்கள் கண்டுபிடிக்க முடியும்.

ஓவியம்: மணிவண்ணன்

நான் நன்றி சொல்ல வேண்டிய தோழர்களின் பட்டியல் நீண்டது. நிகழ்வில் சந்திப்போம் J


Friday, December 23, 2016

சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம்

“பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.  சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு.  அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதயாத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றே தான் வழி.

மார்க்ஸின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அதுவரை உழன்று கொண்டிருந்த ஆன்மீக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது.  மர்க்ஸின் பெருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.” - வி.இ. லெனின், 1913.

கம்யூனிஸ்டுகள் சாதியமைப்பின் கட்டமைப்பை அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானம் என்னும் மார்க்சிய உருவகத்தைச் சொல்லி விளக்கினால் ஏற்றுக்கொள்ளாமல், மார்க்சியத்தை எதிர்மறையாகச் சித்தரிப்பதும் அல்லது மார்க்சியத்தில் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை (இன்ன பிற அடையாளம் சார்ந்த பிரச்சினைகளுக்கும்) என்று சொல்லி அடையாள அரசியலை முன்னெடுப்பதென்பதும் உழைக்கும் வர்க்க ஒற்றுமைக்கு எதிரானப் போக்காகும்.
கடந்த தசாப்தங்களில் சாதியப் பிரச்சினை குறித்து மார்க்சியக் கண்ணோட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் நடந்துள்ளன. மானுட விடுதலையில் ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கற்றறிய வேண்டும். அந்த வரிசையில், நம் சமகாலத்தில், அதாவது 2014இல் நடந்த ஒரு முக்கியமான கருத்தரங்கில் சமர்க்கிப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அரவிந்த் நினைவு அறக்கட்டளை வெளியிட்டுள்ள சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் என்னும் நூலை வாசிக்க நேர்ந்தது. அனைத்து கட்டுரைகளுமே நாம் பதில் தேட நினைக்கும் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இருப்பினும், அரவிந்த் மார்க்சியக் கல்வியகம் குழுவாக மேற்கொண்ட ஆய்வுக் கட்டுரையை மட்டும் நான் மொழிபெயர்த்துள்ளேன்.
அரவிந்த் மார்க்சியக் கல்வியக ஆய்வுக் குழுவினர் சாதியமைப்பின் வரலாற்று வளர்ச்சியை மார்க்சியக் கண்ணோட்டத்தில் விளக்கி, சாதி ஒழிப்பு அரசியலில் முக்கிய பங்காற்றிய தலைவர்கள் பற்றிய ஆய்வுகளையும் முன்வைத்து பின்னர் மார்க்சியக் கண்ணோட்டத்தில் சாதியமைப்பு பற்றிய தங்களது பார்வைகளை முன்வைத்திருக்கின்றனர். சாதி ஒழிப்பை உள்ளடக்கிய வர்க்கப் போராட்டத்திற்கான செயல்திட்டம் என்னவாக இருக்கலாம் என்பதையும் பரிந்துரைத்துள்ளனர்.

சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் என்னும் இந்த நூலில் சாதியப் பிரச்சினையும் அதற்கான தீர்மானங்களும்: ஒரு மார்க்சியக் கண்ணோட்டம் என்னும் கட்டுரையும் அதன் தொடர்ச்சியாக சாதிய பிரச்சினைக்கான தீர்வு… நூலைத் தொடர்ந்து வந்த விமர்சனங்களுக்கு ரங்கநாயகம்மா அளித்த பதில்களின் தொகுப்பாக வந்த சாதி மற்றும் வர்க்கம்: மார்க்சியக் கண்ணோட்டம், விவாதக் கட்டுரைகளின் தொகுப்பு என்னும் நூலிலிருந்து சில கட்டுரைகளை, சில பகுதிகளை மொழிபெயர்த்துள்ளேன். மேலும், சாதியமைப்பு பற்றிய மார்க்ஸின் கருத்துரு*: ஒரு புனரமைப்பு என்னும் தலைப்பில் பி.ஆர். பாபுஜி எழுதிய ஆய்வுக் கட்டுரையும் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனோடு, முகநூல் விவாதங்களுக்கு நான் அளித்த பதில்களைத் தொகுத்தும், விரிவுபடுத்தியும் பின்னிணைப்பாகக் கொடுத்துள்ளேன். இறுதியாக மார்க்சியம் மற்றும் அம்பேத்கர் சிந்தனைகளை ஆய்வு செய்ய விரும்பும் தொடக்கக்கட்ட ஆர்வலர்களுக்காக சில கேள்விகளையும் கொடுத்துள்ளேன். அக்கேள்விகளுக்கு தாமாக ஆய்வு செய்து பதில் தேடி, சீர்தூக்கிப் பார்த்து சாதியப் பிரச்சினைக்கான தீர்வுகளைக் கொண்டிருக்கும் பாதை எதுவென சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியலாம்.